போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை சுமார் 100 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தெரிவித்துள்ளார்.
உவா மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை தொடங்கிய நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல் அரச நிறுவனங்களுக்குள்ளும், குறிப்பாக பொலிஸ் துறையிலும் ஊடுருவியுள்ளது எனவும் நேற்று முன்தினம் 700 கிராம் போதைப்பொருளுடன் ஒருபொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.



.jpg)