மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புன்னைக்குடா கடற்கரையில் திடிரென உலங்குவானூர்தி ஒன்று வந்திறங்கியதுடன் அதில் இருந்து சில வெளிநாட்டு நபர்களும் வந்திறங்கியுள்ளனர்.
இவர்கள் எதற்காக வந்தார்கள் ?ஏன் புன்னைக்குடா கடற்கரையில் தங்களது உலங்குவானூர்தியை நிறுத்தினார்கள்? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகாத போதும்.
அவர்களுடன் சேர்ந்து கடற்கரைக்கு வந்த பலர் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
புன்னைக்குடா பகுதியில் உள்ள பௌத்த பிக்கு உள்ளிட்ட சிலருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன் தங்களது காணியை பார்வையிட வந்ததாக அந்த வெளிநாட்டவர்கள் கூறியுள்ளனர்.
இன் நிலையில் வெளிநாட்டு வெள்ளைக் காரர்களுக்கு தற்போது எப்படி தளவாய் புன்னைக்குடா கடற்கரையில் காணி வந்தது என்ற கேள்வி எழுவதோடு?
வந்தவர்கள் சுற்றுலா பயணிகளா? அல்லது வெளிநாட்டு தனியார் கம்பெனிகளின் பிரதிநிதிகளா என்பது இதுவரை தெரியவில்லை.