ரணிலுடன் கொழும்பு வரை பயணமா? அல்லது தொடர்ந்து பயணமா? ஒரு படம் பல அர்த்தங்கள்?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று உலங்குவானூர்தியில் கொழும்பிற்கு பயணித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. ஒரு புகைப்படம் தற்போதைய அரசியலில் பல அர்த்தங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது.
கொழும்பு வரை பயணமா அல்லது ரணிலுடன் தொடர் பயணமா? என்ற கேள்வியை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாக இருந்த பிள்ளையான் ஜனாதிபதி ரணிலுடன் உலங்கு வானூர்தியில் தனியாக கொழும்பிற்கு செல்லும் அளவுக்கு நெருக்கமாக உள்ளார் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது இது எதிர்வரும் தேர்தலிலும் தொடரும் என கூறப்படுகிறது. ஆனால் போகும் வழியில் இறக்கி விட்டுப் போகலாம் என்று ஜனாதிபதி ரணில் பிள்ளையானை ஏற்றிச் சென்றிருப்பார் என தமிழ் தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
ரணிலுடன் தொடர்ந்து பயணிக்கும் நோக்கில் கொழும்பு வரை பிள்ளையான் பயணம் சென்றாரா?
முழு அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி ரணிலுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உறவு தேர்தல் கூட்டணிக்கானதா? என்பது குறித்த செய்திகளை எதிர்பாருங்கள்.