கருணா அம்மானின் பண்ணையில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சையடி தடான பகுதியில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த இருவருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
கிரான் பேரல்லாவெளி பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கருணா அம்மானுக்கு சொந்தமான பண்ணையில் வயல் வேலைக்காக நின்ற இருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர்.
குறித்த பண்ணையை தனிநபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து செய்து வந்த நிலையில் அங்கு பணியில் இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
யானைப் பாதுகாப்புக்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சின்னநுரைச்சோலை குடும்பிமலையில் வசிக்கும் ஆறுமுகம் யோகநாதன் (51) வினாயகமூர்த்தி சுதர்சன் (21) என்ற இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதே வேலை கடந்த வருடமும் இதே இடத்தில் இவ்வாறு சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி தாக்கியதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.