இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சசிகலா உள்ளிட்ட பலர் மண்டபத்திற்கு வெளியே குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு மண்டபத்துக்குள் தங்களை அனுமதிக்கவில்லையென சசிகலா ரவிராஜ் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (21) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், சசிகலா ரவிராஜ் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த பலரும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.