மட்டக்களப்பு வாவியில் மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில்.
வருடாந்தம் மட்டக்களப்பில் உள்ள ஆற்றுவாய் வெட்டப்படுவதால் தங்களது மீன்பிடி தொழில் முற்றாக பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் தங்களது நாளாந்த குடும்ப வாழ்வாதாரத்தை கூட கொண்டு நடாத்த முடியாத நிலை உருவாகி உள்ளதாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு வாவியில் நன்னீர் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலைகளில் தற்போது மீன்கள் பிடிபடுவது மிகவும் குறைவாக உள்ளதாகவும் சில நேரங்களில் அவரே மீன்கள் இன்றி கரைக்கு திரும்ப வேண்டி உள்ளதாக கூறுகின்றனர்.
வருடாந்தம் சில சுற்றுலா விடுதிகள் வெள்ளத்தில் மூழ்கவதாக கூறி முன் கூட்டியே ஆற்றுவாயை வெட்டி விடுவதால் மட்டக்களப்பு வாவியில் உள்ள மீன்கள்,இரால்கள் என்பன கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும் இதனால் வாவியில் மீன் இல்லாமல் போவதால் இந்த நிலை உருவாகுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இதனால் தங்களது மீன்பிடி தொழில் முற்றாக பாதிக்கப்படுவதாக அவர்ள் கூறுகின்றனர்.
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு,மயிலம்பாவெளி, சத்துருக்கொண்டான் பகுதிகளைச் சேர்ந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இது குறித்து அரச அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ கவனம் செலுத்தி தங்களுக்கான நஷ்ட ஈட்டை பெற்றுத் தரவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
மட்டக்களப்பு ஆற்றுவாயை தங்களது தேவைகளுக்காக முன் கூட்டியே வெட்டி விடும் அதிகாரிகள் அதனால் பாதிக்கப்படும் நன்னீர் மீனவர்களுக்கு கட்டாயம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.