மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று காலை ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ஏறாவூர் 4ம் குறிச்சி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நிறுத்தி வைத்திருந்த பட்டா ரக வாகனம் ஒன்றில் இருந்த சாரதி எதிர்பாராத விதமாக வாகனத்தின் கதவை திறந்த போது வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் கதவில் அடிபட்டு கீழே விழுந்த நிலையில் பின்னால் வந்த மற்றுமொரு பட்டா ரக வாகனம் அவர் மீது ஏறிச் சென்றதால் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஏறாவூர் 4ம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா சுதர்சன் (36) என்ற குடும்பஸ்தர் என வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்தன