இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பகிர்ந்தளிக்கும் முயற்சியில் இன்றைய தினம் குகதாசனுடன் சமரச பேச்சுவார்த்தை முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுச் செயலாளர் விடயத்தில் சமரசமாக செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பகிர்ந்து கொண்டு இணக்கப்பாட்டோடு செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்திருந்தார்.
தற்போதைய பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் அவர்களது தலைமையில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (11.02.2024) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இன்றை தினம் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்ட பொதுச் செயலாளர் குகதாசன் உடனான சமரச பேச்சுவார்த்தைகள் குறித்து வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு குறித்து இனிமேல் எந்த வாக்கெடுப்பும் நடைபெறாது.
பொதுச் செயலாளர் பதவியை குகதாசன் மற்றும் சிறிநேசன் ஆகியோருக்கு இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கும் நோக்குடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதல் வருடத்தை யாருக்கு வழங்குவது என்பதில் தான் இழுபறி நிலை உள்ளது.
முதல் வருடத்தை மட்டக்களப்பிற்கு தருமாறு கோரியிருந்தோம் ஆனால் முதல் வருடத்தை திருகோணமலைக்கு தருமாறு குகதாசன் ஐயா கோரியுள்ளார்.
ஆனால் அது குறித்து மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் பேசி முடிவெடுப்பதாக கூறியுள்ளேன்.
ஊடகங்களி இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும் என கோரி கையெழுத்து சேகரிக்கப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனவு தெரிவித்தார்.