அரசியல் நோக்கங்களுக்காகவே உண்ணாவிரதப் போராட்டம்!
செங்கலடியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் நோக்கத்தில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட கனிப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று மட்டக்களப்பு மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமைப்பின் செயலாளர் ஞானப்பிரகாசம் யூலியன் ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கனிப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் உள்ளது. ஆனால் செங்கலடி பிரதேச செயலக வீதியில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தும் நபர்களுக்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இரண்டு வருடங்களாக மண் அனுமதி பத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தான். முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் அவர்களிடம் அப்போது நாங்கள் பேசிய போது ஏறாவூரைச் சேர்ந்தவர்களுக்கும் மண் அனுமதி பத்திரம் வழங்க வேண்டும் அதற்காகவே இதனை நிறுத்தி வைத்துள்ளோம் என்று கூறினார்.
அப்போது ஆர்ப்பாட்டமோ உண்ணாவிரதப் போராட்டோமோ செய்யாதவர்கள் இன்று வந்து போராட்டம் நடாத்துவதன் நோக்கம் என்ன?
ஏமக்கா மண் அனுமதி பத்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வாறு மண் அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதை விரும்பாதவர்கள் ஒரு சிலரின் தூண்டுதலில் இவ்வாறான போராட்டத்தை நடாத்துகின்றனர். என்றார்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அபிவிருத்தி குழு பதவியை பறிக்க வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டம் இருப்பவர்களுக்கு பின்னணியில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் இருப்பதாக கூறப்படுகிறதே என கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது.
இது போன்ற சங்கங்களை உருவாக்கி மண் அனுமதி பத்திரத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என்று கூறியவர்களில் மோகன் அவர்களும் ஒருவர்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு கோரிக்கை முன்வைத்திருந்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் அவர்கள் தற்போது மண் அனுமதி பத்திரம் வழங்கவில்லை என கூறி சிலரை வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்துகின்றார்.
இதற்கு பின்னணியில் ஒரு அரசியல் இருக்கிறது என்பது தான் உண்மை என கூறினர்.