கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில் வெள்ளிக்கிழமையன்று இரவு -23 இடம்பெற்ற கொலையொன்றில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கூழாவடிச்சேனை வாகநேரியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான வை.கோமலம் வயது -48 என்பவரே கூரிய ஆயுதத்தினால் கழுத்தறுக்கப்பட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறைசாலையில் இருந்து அண்மையில் பிணையில் விடுதலையாகி வந்தவரான உயிரிழந்தவரின் மருமகனே தமது மாமியினை இவ்வாறு கொலை செய்துள்ளதாக வாழைச்Nனை பொலிசார் தெரிவிக்கின்றனர்.தனிப்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது
தமது மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் தன்னுடன் தொடர்பின்றி காணப்படுவதுடன் கொலையுண்ட தமது மாமியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு வைத்துள்ளமையை அறிந்து தன்னுடன் நீண்ட நாட்காளாக கதைக்காமல் உள்ளமையினால் ஆத்திரம் கொண்டு இவ் கொலையினை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
கொலையாளி ஏற்கனவே 9 வருடங்களுக்கு முன்பு இதே போன்று தமது மாமனாரை தலைப் பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளதாக பிரதேச வாசிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதற்காக அவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறைசாலையில் இருந்து விடுதலையாகி வீடு வந்து சேர்ந்துள்ளார்.இவ்வாறான நிலையில் இக் கொலை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் அவரை கைது செய்வதற்காக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற் கூற்றாய்விற்காக வைககப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.