சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கையொப்பம் இட்டுள்ளார்.
இலங்கையில் தேர்தல் ஒன்று நடைபெற உள்ள நிலையில் மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டுவர உள்ள நிலையில்.
இதன் ஊடாக பாராளுமன்ற பெரும்பான்மையை பரீட்சித்துப் பார்ப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
உச்ச நீதிமன்ற நிபந்தனைகளை மீறி நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, ஜி. எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா உள்ளிட்ட பலர் கைச்சாத்திட்டுள்ளனர்.
தேர்தல் ஒன்றை சந்தக்கவுள்ள நிலையில் கூட்டணி ஒன்றை உருவாக்கவும் , எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம் குறித்து பரீட்சித்துப் பார்ப்பதற்கும் இந்த நம்பிக்கை இல்லாமப் பிரேரணையை எதிர்க்கட்சி தலைவர் சத்யஜித் பிரேமதாசா பயன்படுத்தலாம் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.