உயிரிழந்த சாந்தன் இறுதியாக எழுதிய கடிதம் என்ற வகையில் அவருடைய கையெழுத்துடனான கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கல்லீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழப்பு
கல்லீரல் செயலிழப்பு காரணமாகவே சாந்தன் உயிரிழந்துள்ளதாக ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி தேணிராஜன் தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை அளித்த போதும் இன்று காலை 07.50 இற்கு சாந்தனின் உயிர் பிரிந்த நிலையில், பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.