வெடுக்குநாறி மலையில் வழிபாட்டில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட ஆறு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
என்றாலும், கைதுசெய்யப்பட்டு சில நிமிடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை விடுவித்துள்ள பொலிஸார் ஏனையோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வெடுக்குநாறி மலையில் இரவு 6 மணிக்கு மேல் யாரையும் தரித்து நிற்க வேண்டாம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்த பின்புலத்திலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. வெடுக்குநாறி மலையில் இரவு தங்க பொலிஸார் தடை
வெடுக்குநாறி மலையில் இரவு 6 மணிக்கு மேல் யாரையும் தரித்து நிற்க வேண்டாம் எனவும் அவ்வாறு தரித்தால் கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கைது செய்யவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை அகற்ற குறித்த மலை தொல்லியல் திணைக்களத்துக்கு சொந்தமானது என ஆரம்பத்தில் தெரிவித்த பொலிஸார் அதற்கான உரிய சான்றுகள் இல்லாத காரணத்தினால் இது வனவிலங்கு திணைக்களத்துக்கு உரியது என தெரிவித்துள்ளனர்.
வனவிலங்கு துறையின் அதிகாரிகளும் இதனை மறுத்தமையால் பொதுமக்கள் தொடர்ந்தும் அங்கு தரித்து நிற்கின்றனர்.
பொதுமக்கள் தொடர்ந்தும் தரித்து நிற்பதை தடுக்கும் நோக்கில் பொலிஸார் குறித்த தடையை விதித்துள்ளனர்.
இதேவேளை , கலகத் தடுப்பு பொலிஸாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐஸ்கிறீம் வியாபாரியை அகற்றிய பொலிஸார்
வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிஸார் அகற்றிய நிலையில், ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பொதுமக்களுக்கு பொலிஸாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது ஆலய வளாகத்தில் ஐஸ் கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை பொலிஸார் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து ஆலயவளாகத்தை விட்டு அகற்றியுள்ளார். இதனால் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது. வெடுக்குநாறி பூசகர் பிணையில் செல்ல அனுமதி
வவுனியா – வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் இருவரும் வவுனியா நீதவான் நீதமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இருவரும் ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி பூஜைக்கான ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் ஒருவரும் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டக்கது.