நாளை மட்டக்களப்பில் ஈஸ்டர் படுகொலை தொடர்பான புத்தக வெளியீடு நடைபெற உள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலைகள் என்ற வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு நாளைய தினம் மட்டக்களப்பில் நடைபெற உள்ளது.
நாளை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள அஞ்சனா மண்டபத்தில் நடைபெற உள்ள மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் படுகொலைகள் மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ள மேற்படி நூலில் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.