கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கிரான் சிறி சித்தி விநாயகர் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஷ மகா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை நடைபெற உள்ளது.
இன்று காலை 7.30 மணி முதல் மாலை நான்கு மணிவரை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம் பெற்று நாளைய தினம் புதன்கிழமை காலை 9.15 மணிமுதல் 10.57 மணி வரை உள்ள சுப முகூர்த்த வேலையில் கிரான் சிறி சித்தி விநாயகப் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி சபரிமலைக் குரு முதல்வர் சிறி ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் மகா கும்பாபிஷேக கிரியைகள் அனைத்தும் நடைபெற உள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.