சிங்கள, முஸ்லீம் அமைச்சர்களுக்கு பின்னால் ஓடும் அதிகாரிகள்! மகளீர் தின நிகழ்வை புறக்கணித்தது ஏன்? சீறிப்பாய்ந்த இராஜாங்க அமைச்சர்!
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கலந்து கொண்ட மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மகளீர் தின நிகழ்வை செங்கலடி பிரதேச செயலாளர் உள்ளிட்ட சில திணைக்கள உயர் அதிகாரிகள் புறக்கணித்திருந்தனர்.
சிங்கள, முஸ்லீம் அமைச்சர்களுக்கு பின்னால் ஓடும் அதிகாரிகள் மகளீர் தின நிகழ்வை புறக்கணித்தது ஏன் என கேள்வி எழுப்பினார். இது குறித்து சீறிப்பாய்ந்த இராஜாங்க அமைச்சர் பின்வருமாறு கூறினார்.
அவர் பேசும் போது மிகவும் காரசாரமாக அதிகாரிகளை பேசியிருந்தார்.
அவர் பேசும் போது சிங்கள அமைச்சர்கள், முஸ்லீம் அமைச்சர்கள் வரும் போது பின்னால் பிரடியில் பின்னங்கால் அடிபட ஓடும் சில அரச அதிகாரிகள் செங்கலடி பிரதேசத்தில் பெண்களை கௌரவிக்கும் மகளீர் தின நிகழ்வை புறக்கணித்து விட்டு வேறு எங்கோ சென்றுள்ளனர்.
மண் மாபியாக்களுக்கும் பணக்கார வர்க்கத்திற்கும் ஓடி ஓடி பணியாற்றும் மேற்படி அதிகாரிகள் ஏழை மக்களுக்கு பணியாற்றாது அவர்களை ஏமாற்றி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், நீர்ப்பாசன திணைகள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த நிகழ்வை புறக்கணித்து உள்ளனர்.