இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட வாகரை பிரதேச செயலகப்பிரிவில் வாகரைப் பிரதேச மக்களால் இறால்ப்பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளுனர் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் முன்பாக மக்கள் போராடி வருகின்றனர்
இயற்கை வளங்களை அழிக்கும் செயற்திட்டங்கள் தமக்கு வேண்டாம் எனவும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயத்தை அழிக்க வேண்டாம் எனக் கோரிய மக்கள் குறித்த திட்டங்கள் நிரந்தரமாக தடை செய்யும் வரை தமது போராட்டம் அடையாள கவனயீர்ப்பாக தொடரும் என்பதை பிரதேச மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கமைய வாகரை பிரதேச செயலகத்தின் நுழைவாயில் மக்களால் பறிக்கப்பட்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் தாம் புதிதாக எந்த அனுமதியையும் இறால் பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வு க்காக வழங்கவில்லை என்றும் தன்னை மீறி கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் சில அரசியல் தலைவர்கள் இச்செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என குறிப்பிட்டார்.
மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளுனர் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் முன்பாக மக்கள் போராடி வருகின்றனர்