‘ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையே ஆதரிப்பார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழ் பொது வேட்பாளரை விரும்பமாட்டார்கள்.’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்
‘2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் தமிழ் பொது வேட்பாளரை விரும்பமாட்டார்கள். அந்த மக்களின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் வடக்கு – கிழக்கு மக்களின் அதிகூடிய வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்தன. எனினும் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த இரட்டை நிலைப்பாடுகளால் அவரால் அந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. என தெரிவித்தார்.