மண்டூர் கணேசபுரத்தில் வெள்ளை வேனில் வந்தவர்களால் 19 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் குறித்த பெண் பிள்ளை விரும்பியே சென்றுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை பாடசாலைக்கு தனது உறவினரை ஏற்றிச் சென்ற போது வெள்ளை வேனில் வந்தவர்களால் வீதியை மறித்து குறித்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.