அம்பலாங்கொடை பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவரை படுகொலை செய்ய முயற்சித்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து கைத்துப்பாக்கியும், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்துள்ளனர்.