மட்டக்களப்பு தன்னாமுனை பகுதியில் மகிழுந்து ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது!
செங்கலடியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி சென்ற கார் வேக கட்டுப்பாட்டை இழந்து தன்னாமுனை ஆற்றுப்பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இது குறித்த விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.