மாத்தறை – தெலிஜ்ஜவில சந்தியில் நேற்று (20.01.2024) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கைப்பேசி விற்பனை நிலையம் ஒன்றினுள் இருந்த இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.