மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி தினத்தையொட்டி கறுப்பு பட்டி எதிர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
கறுப்பு ஜனவரி தினத்தை முன்னிட்டு – ஊடக அடக்குமுறைக்கு முறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் கறுப்புப் பட்டி போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இடம் பெறவுள்ளது,
குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஊடகவியலாளர்கள் , சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,மத குருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் , அரசியல்வாதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கையில் பதாதைகளை ஏந்தியவாறு தலையில் கறுப்பு பட்டி அணிந்து சுமார் ஒரு மணி நேரம் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.