இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திகதியை கரி நாளாக அனுஸ்டிக்குமாறு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏற்கனவே இலங்கையின் சுதந்திர தினத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கரி நாளாக பிரகடனப்படுத்தி உள்ள நிலையில் அதற்கு ஆதரவாக கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இன்று மட்டு ஊடகமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராஜா செல்வராணி இவ்வாறு தெரிவித்தார்.
“இலங்கையின் சுதந்திர நாளை கரிநாளை அனுஸ்டிக்குமாறும் அன்றை தினம் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து தங்களது கரிநாள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும், சிவில் சமூக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது அமைப்புகள், பல்களைகழக மாணவர்கள், மத குருமார்கள் என அனைவரையும் ஆதரவு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.