சாணக்கியன் வேலன் சுவாமிகளை பேசியது தவறு மட்டக்களப்பில் பிரதேசவாதத்திற்கு இடமில்லை வந்தாரை வாழவைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச வாதத்திற்கு இடமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
போராட்டத்தில் கலந்து கொண்டு வேலன் சுவாமியிடம் பிரதேச வாதம் போன்று சாணக்கியன் கலந்து கொண்டது தவறு.
எல்லோரும் எங்களிடம் கேட்கின்றனர். உங்களது கட்சியை சேர்ந்த ஒருவர் இவ்வாறு பேசியுள்ளார் அதனை உங்களது கட்சி ஏற்றுக் கொள்கிறதா என்று.
உண்மையில் நாங்கள் அதனை வன்மையாக கண்டிக்கிறோம், வேலன் சுவாமியிடம் இதற்காக மன்னிப்பு கோருகின்றோம்.
இனிமேல் இது போன்ற செயற்பாடுகள் நடைபெறக் கூடாது என தெரிவித்தார்.