செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் பறாமரிக்கப்படாத பாதுகாப்பற்ற கிணறுகளில் இருந்து பரவும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த கிணறுகளுக்குள் திலாப்பியா மீன்களை விடுவது தொடர்பாக ஆராயப்பட்டது.
செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டது.
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில். டெங்கு நுளம்புகள் பரவும் இடமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் பராமரிப்பற்ற பாதுகாப்பு இல்லாத கிணறுகளில் இருந்து அதிக டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு கிணற்றிற்கும் நான்கு திலாப்பியா மீன் குஞ்சுகள் வீதம் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான மீன் குஞ்சுகளை தருமாறு நன்னீர் மீன்பிடி அதிகாரிகளிடம் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.