மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை செங்கலடியில் வழிமறித்த பொலீசார் திருப்பி அனுப்பி இருந்தனர்.
இவ்வாறு வீதியை மறித்து திருப்பி அனுப்பப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலீசாரை ஏமாற்றி விட்டு மீண்டும் மற்றுமொரு பேருந்தில் ஏரி சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து செங்கலடி பகுதியில் பொலீசார் குவிக்கப்பட்டு பதுளை வீதியில் இருந்து வரும் ஆர்ப்பாட்டகாரர்களை வழிமறிக்க தயாராகி வருகின்றனர்.