மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒழுங்கான முறையில் விடுதி வசதிகள் மற்றும் மாபொல வசதிகள் இல்லாததால் கல்வியை இடைநடுவில் கைவிடும் நிலை உருவாகி உள்ளதாக கூறி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பணவை அதிகரிக்க கோரியும், பல்கலைக்கழக விடுதி வசதி இன்மை பிரச்சினை உள்ளி பிரச்சினைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கொம்மாதுரை பகுதியில் இருந்து பேரணியாக வந்த மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
01. தற்போது வழங்கும் மகாபொல கொடுப்பணவை அதிகதிரிக்க வேண்டும்.
(தற்போது 5000 ரூபா வழங்கப்படுகிறது, அதிகரித்து தரக் கோருகின்றனர்.)
02. புதியதாக இணைந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 6 மாதமாக மகாபொல வழங்கப்படவில்லை.
03. மாணவர்கள் தங்கும் விடுதியில் மருத்துவ வசதி இல்லை , நிரந்தர வைத்தியர் வேண்டும்.
04. இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி இல்லை, விரைவில் வழங்குவதாக கோரியும் விடுதி வழங்க இழுத்தடிப்பு செய்கின்றமை. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.