நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் 233வது படையணியை சேர்ந்த
FONTERRA ,வின் அனுசரணையில் இப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறு பால் மா பொதிகளை வழங்கும் நிகழ்வு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 272 பயனாளிகளுக்கு 544-பால்மா பொதிகள், மயில வெட்டுவான் ,ஈரளக்குளம் ,கரடியனாறு மரப்பாலம், கொடுவாமடு ,பன்குடாவெளி ,வேப்பவெட்டுவான் ஆகிய ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆறுமுகம் சுதாகரன் மற்றும் பிரதேச செயலக கணக்காளர் திருமதி டிலானி ரேவதன், 233- படையணியை சேர்ந்த கோப்ரல் நுவன் சமர மற்றும் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு உரிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தவர்கள் ,பிரதேச செயலக திட்டமிடல் கிளையின் உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது 272 பயனாளிகளுக்கு 544-பால்மா பொதிகள், மயில வெட்டுவான் ,ஈரளக்குளம் ,கரடியனாறு மரப்பாலம், கொடுவாமடு ,பன்குடாவெளி ,வேப்பவெட்டுவான் ஆகிய ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்ட