நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று சொல்லி வந்தவர் தான் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆனால் இன்று அவர் சொல்கிறார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று என பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பு ஏறாவூர் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயனாளிகளுக்கு ஊக்குவிப்பு வழங்குதல் மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற விடயம் தற்போது பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்றால் நாங்கள் ஆதரவு கொடுக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட கூறியுள்ளார்.
இவர் கூட நல்லாட்சி காலத்தில் வருகின்ற பொழுது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்று சொல்லிக் கொண்டுதான் வந்தார்.
நாங்கள் கூட எதிர்பார்த்தோம் நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றம் செய்தவர்கள், ஊழல் செய்தவர்களை சிறையில் அடைப்பார்கள் என்று. நாங்கள் கூட நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தோம். ஆனால் அவர்கள் முற்றாக அதனை செய்யவில்லை. பாராளுமன்றம் இடையில் களைக்கப்பட்டது.
இன்று சொல்கிறார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பெருபான்மை தங்களிடம் உள்ளதாக.
இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையால் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த காலங்களும் உண்டு ஆனால் அவையெல்லாம் நடக்காமல் போனது.
எனவே இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது.
ஏற்கனவே ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் அப்போது அதை செய்யாது இன்று வந்து சொல்கின்றனர்.
எனவே யாரை நம்புவது என்ற நிலையில் தான் நாங்கள் உள்ளோம் என்றார்.