இலங்கையில் இறுதியாக நடந்த 2011ம் ஆண்டு கணிப்பீட்டின் அடிப்படையில் அண்ணளவாக 5679 யானைகளுக்கு மேல் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அரைவாசி ஆண் யானைகள் எனவும் அரைவாசி பெண்யானைகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளையில் மட்டக்களப்பு அம்பாறை பொலநறுவையை அண்மித்த இடங்களில் அண்ணளவா ,500 யானைகள் உள்ளதாக மேற்படி கணிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
25 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் யானை பிரச்சனைகள் உள்ள மாவட்டங்கள் இதில் 12 மாவட்டங்களில் உதவி பணிப்பாளர் அலுவலகம் உள்ளது.
ஆனால் 2000 ஆம் ஆண்டு அளவில் மட்டக் களப்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் காரியாலயம் ஆரம்பிக்கப்பட்டாலும் 30 வருடங்களாக அம்பாறை உதவிப் பணிப்பாளர் அலுவலகத்துடனயே தற்போதும் இயங்கிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் உதவி பணிப்பாளர் அலுவலகம் இருக்குமானால் மாத்திரமே அதன் வளங்கள் கிளை அலுவலகங்கள், ஆளணி, வாகனம் எரிபொருள் etc என அனைத்தும் வழங்கப்படுவது வழமை.
இதன்காரணமாக தான் மட்டக்களப்பிற்கு 3000 வெடிகள் வழங்கப்பட்டது.
2023 ஏப்பிரலுக்கு பின்னர் நமது முயற்சிகளை அடுத்து இரட்டிப்பாக 6000 ஆக்கப்பட்டது.
தற்போதைய தகவலின் அடிப்படையில் இரண்டு வகையான வெடிகளில் எறியும் வெடி மாத்திரமே வழங்கப்படுகின்றது. ஆனால் யானை துரத்தும் நேரங்களில் உத்தியோகத்தர்கள் மாத்திரம் செலவு காரணமாக வானவெடி பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, பொலநறுவை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்கள் வடகிழக்கு சார்ந்த பிரதேசங்களை அண்மித்து உள்ளதால் மேற்படி ஆறு மாவட்டங்களிலே யானைகளின் பரம்பல் அதிகமாக உள்ளது.
இலங்கையை எடுத்துக் கொண்டால் தேசிய பூங்காக்கள் 25, சரணாலயங்கள் 67,அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் 03, சிறைச்சாலை 01,
சமுத்திர சரணாலயம் 02 இவையாவன (மட்டக்களப்பு
அபிவிருத்திக்காக காயான்கேணி, மற்றும் கற்பிட்டி) இதுவரையில் அமைக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே ஒரு யானைக்கு 10 சதுர கிலோமீட்டர் புற்தரை தேவையாக உள்ளது. அதாவது 35 தொடக்கம் 40 கிலோமீட்டர் ஒரு நாளைக்கு யானை ஒன்று அண்ணளவாக 150 தொடக்கம் 200 கிலோ உணவாக எடுத்துக் கொள்கின்றது இதன் அடிப்படையில் இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் 5679 க்கு மேற்பட்ட யானைகள் உள்ள நிலையில் நிச்சயமாக இந்த எண்ணிக்கை எமக்கு மிகவும் அதிகம் எனவும் கூறப்படுகின்றது.
அதே வேளையில் மேலேதிகமாக உள்ள யானைகளை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக இருந்தால் நிச்சயமாக தற்போதைய பொருளாதார நிலையில் அந்நியச்செலாவணியை ஏற்படுத்துவதற்கும் பாரிய சந்தர்ப்பங்கள் இலங்கைக்கு உண்டு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமாக மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் மாத்திரம் வவுணதீவு, செங்கலடி மற்றும் கிரான் அண்ணளவாக 500 யானைகள் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் உன்னிச்சை குடும்பிமலைப்பிரதேச காடுகள் வனவள திணைக்களத்திற்கும் அதை அண்டிய மாதுறு ஓயா காடுகள் வனவிலங்கு திணைக்களத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலங்களில் மட்டக்களப்பு என்ற பெயரிலேயே அம்பாறை மாவட்டம் இயங்கிக் கொண்டிருந்தது ஆனால் 1956 காலப்பகுதியில் ஏற்பட்ட சத்தியாக்கிர போராட்டம் தொடர்ந்து இனக் கலவரமாக மாற்றம் பெற்று அபிவிருத்திக்காக
60 -70 வீதமான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டதன் அடிப்படையில் 7002 சதுர கிலோமீட்டர் ஆக இருந்த மட்டக்களப்பு மாவட்டம் 1961இல் சுற்றுநிருபம் 12341 அடிப்படையில் 1962 இல் மட்டக்களப்பு 2610 சதுர கிலோ மீட்டர் ஆகவும் அம்பாறை 4222 சதுர கிலோமீட்டர் ஆகவும் பிரிக்கப்பட்டு அம்பாறை தனி மாவட்டமாக பிரிக்கப்படுகின்றது.
அதற்குப் பிறகு மட்டக்களப்பை விட நிலப்பரப்பில் கூடிய மாவட்டமாகவும் வளங்களைக் கொண்ட மாவட்டமாகவும் அம்பாறை மாவட்டம் மாறுகின்றது.
முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் மூன்று தேசிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது 2006 சுற்றுநிருபத்தின் படி 35,665 ஹெக்டயர்களைக் கொண்டு குமண தேசிய பூங்காவும், 2006 சுற்றுநிருபத்தின்படி 5131 ஹெக்டயர்களைக் கொண்டு லவுக்கல தேசிய பூங்காவும், 1983 ஆம் ஆண்டு சுற்றுநிருபத்தின்படி 58,850 ஹெக்டயர்களைக்கொண்டு மாதுறுஓயா தேசிய பூங்காவும் இயங்கிக்கொண்டு வருகிறது.
இதன் முறையே வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய உத்தியோகத்தர்கள் குமணையில் 25 உத்தியோத்தர்களும்,லவுகலையில் 10 உத்தியோகத்தர்களும், மாதுறுஓயாவில் 35 உத்தியோகத்தர்களும் கடமையாற்றுகிறார்கள்.
அதேபோல் மொனறாகல மாவட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 18 கிலோமீட்டர் அப்பால் 1954 சுற்றுநிருபத்தின்படி 25,900 ஹெக்டயர்களைக்
கொண்டு கல் ஓயா தேசிய பூங்காவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மறுபக்கத்தில் பொலநறுவை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கு மூன்று தேசிய பூங்காக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவையாவன 1997 சுற்றுநிருபத்தின் படி மின்னேரியா தேசிய பூங்கா 8889 ஹெக்டயர்களிலும்
சோமாவதி தேசிய பூங்கா 1986 சுற்று நிருபத்தின் படி 37,646ஹெக்டயர்களிலும்
கவுடுல்ல தேசிய பூங்கா 2002 சுற்று நிருபத்தின் படி 6900ஹெக்டயர்களிலும்
இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் முறையே மின்னேரி தேசிய பூங்காவில்
15 வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும்சோமாவதி தேசிய பூங்காவில் 15 உத்தியோகத்தர்களும் கவுடுல்ல தேசிய பூங்காவில் 15 உத்தியோகத்தர்களும் கடமை ஆற்றுகின்றார்கள்.
ஆனால் மட்டக்களப்பில் நிரந்தரமாக நகரில் உள்ள வன ஜீவராசிகள் காரியாலயத்தில் நால்வரும் வெல்லாவெளி காரியாலயத்தில் நால்வரும் கிரான் காரியாயத்தில் மூவருமே கடமை ஆற்றுகிறார்கள்
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதிக்கள் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பொலநறுவை மாவட்டத்திலும் பல யானைகள் வாழ்ந்துள்ள பிரதேசங்களை நகரமாக்கியதன் காரணமாக அங்குள்ள யானைகள் அனைத்தும் எமது வடிச்சல் பகுதிகளான மட்டக்களப்பை நோக்கி நகரத் தொடங்கியது.
ஆரம்பத்தில் அண்ணளவாக
100 யானைகளால் தான் மட்டக்களப்பில் பிரச்சினைகள் இருந்த நிலையில் இந்த அபிவிருத்திகளுக்கு பிறகு மேலும் கிட்டத்தட்ட 400 யானைகள் அதிகரித்ததை அறியக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் யானைகள் சோமாவதி இல் இருந்து வாகரையூடாக பரண கொரிடோர், தொப்பிக்கல, மாதுறு ஓயா, பூவாக்கல கல்ஓயா, லவவுக்கல, கொடுஓயா, பாணம, குமண, யால தொகுதி-2 ஊடாக யால சரணாலயத்தை அடைவது வழமை.
இந்த வேளைகளில் மட்டக்களப்பில் அறுவடை காலங்கள் நடைபெறுவதால் குறிப்பாக ஜூன் ஜூலை மாதங்களில் மேற்படி யானைக் கூட்டங்கள் சந்தனமடு ஆற்றை அண்டிய பிரதேசத்தில் குடிநீருக்காக ஒன்று கூடுவது வழமை.
அதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டளவில் இப் பிரதேசங்களில் 750 யானைகள் ஒன்று கூடியதாக தகவல்.
பொதுவாகவே இலங்கையில் யானைகளால் நெற் செய்கைக்கு 07% தாக்கங்களும் தென்னை பயிர்செய்கைக்கு 03% தாக்கங்களும் இருந்தாலும்
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டமானது விவசாய மாவட்டம் என்ற அடிப்படையில் மட்டக்களப்பில் அண்மை காலங்களில் இத்தாக்கங்கள் மேலும் அதிகமாக உள்ளது.
அண்ணளவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 176 கிலோ மீட்டர் யானை வேலிகள் இருந்தாலும் புதிதாக 104 கிலோமீட்டர் முன்மொழியப்பட்ட நிலையில் 20 கிலோமீட்டர் கடந்த வருடம் நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 84 கிலோமீட்டர் இந்த வருடத்தில் செய்வதாக கூறப்பட்டுள்ள நிலையில் நிர்மாண வேலைகளுக்கான நிதி இதுவரையில் ஒதுக்கப்படவில்லை.
உண்மையிலேயே யானை வேலி தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் 20 வருடங்களுக்கு மேற்பட்ட தொழில்நுட்பமே இலங்கையில் தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றது.
அதற்குப் பிற்பாடு அண்மையில் யானை வேலிக் கட்டைகளுக்கு கம்பி வலை சுற்றுவது என்ற தொழில் நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில் அகழி வெட்டும் வேலை திட்டங்களும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டாலும் இது வெற்றியளித்ததாக தெரியவில்லை.
அதன் பிற்பாடு அண்மையில் தொங்கு வேலியும் சாதகமான விடயங்களை கண்டறியப்பட்டாலும் இதுவரையில் அரசாங்கத்தால் எப்பிரதேசத்திலும் இந்த தொங்குவேலி எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை.
ஆனால் தனியார் இதை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார்கள் யானைகளை எடுத்துக் கொண்டால் பெண் யானைகள் கூடுதலாக குடும்பத்தோடு உணவருந்த வருவதால் இவைகள் மூர்க்கத் தனம் பிடித்து மனித யானை மோதல்கள் இடம் பெறுவது மிகவும் குறைவு.
ஆனால் ஆண் யானைகளை எடுத்துக் கொண்டால் உணவு எடுப்பதற்கு செல்லும் வேளையிலும் உணவு எடுத்த பின் திரும்பும் வேளையிலும் மூர்க்கத்தனத்தில் மனிதர்களை தாக்குவதும் இறப்பதும் அதிகம்.
அந்த வகையில் உண்மையிலேயே யானைகளை பொறுத்தவரையிலே பகல் வேளையில் 9:00 மணி முதல் 3 மணி முதல் வரையும் நின்ற நிலையில் அல்லது சாய்ந்து தூங்குவது வழக்கம்.
அதாவது 05 தொடக்கம் 06 மணித்தியாலங்கள்.
ஒரு யானை தனது உணவுக்காக 20 கிலோமீட்டர் நடக்கும் ஒரு நாளைக்கு நடக்கும் அதாவது மூன்று மணிக்கு பின் வெளியே வரும் யானைகள் பகல் வேளையில் 100 மீட்டர் கண்பார்வை துல்லியமாக இருந்தாலும் இரவு வேளையில் மோப்ப சக்தியும் கண்பார்வையும் யானைகளுக்கு அதிகம்.
ஒருவர் உயிரிழந்தால் ஒரு மில்லியன் அதாவது 10 இலட்சம் ரூபாய்கள் நஷ்டஈடாக, ஒரு வீடு பாதிக்கப்பட்டால் 2 இலட்சம் ரூபாய்களும் இரண்டு கைகள் அல்லது கால்களை இழந்து இயங்க முடியாத நிலையில் 10 இலட்சம் ரூபாய்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. அந்த தகவல்களை ஒப்பிடுகையில் ஒரு வருடத்திற்கு அரசாங்கம் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதே வேளையில் தேசிய பூங்காக்கள் மூலம் உதாரணமாக எடுத்துக் கொண்டால் யால சரணாலயத்தில் நாலு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கின்றது.
தரவுகளின் அடிப்படையில் கடந்த 2018 முதல் 2023 வரையான 06 வருட காலங்களில் மனித யானை மோதல் காரணமாக 86 மனித உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது,
140 மனிதர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்,
924 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது, 94 யானைகள் இறந்துள்ளது.
இதில் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு 21 மனிதர்கள் யானை தாக்கத்தால் இறந்துள்ளார்கள் இலங்கையில் நடைபெற்ற கூடிய ஒரு வருடத்தில் இடம்பெற்ற இறப்பு இதுவாகும்.
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக யானை மனித மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இது விடயமான தகவல்களையும் இதற்கு எடுக்கப்பட வேண்டிய திட்டம் A,B,C என்ற வகையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு காரியாலய தலைமை உத்தியோகத்தரின் தகவலின் அடிப்படையில்
தற்போது 200 கிலோ மீட்டர் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது
பிரதேசங்களில் ஒவ்வொரு நாட்களும் 200 முதல் 300 கட்டைகளை உடைத்துக் கொண்டு யானை உள் பெறுவதாகவும் ஆனால் அண்மையில் அமைக்கப்பட்ட இருபது கிலோமீட்டர் வேலிகள் கனம் கூடிய கம்பி வலைகள் சுற்றப்பட்டுள்ளதால் 8 மாத காலங்களாக கட்டைகளை உடைக்கவில்லை என கூறப்படுகிறது
அந்த வகையில் அவரிடமிருந்து கிடைக்கப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு
திட்டம்-A
10 தொடக்கம் 15 கிலோமீட்டர்க்குள் உள்ள யானைகளை குறைந்த மனிதவளையும் குறைந்த வெடிகளை பயன்படுத்தி லோ ரிஸ்க் உடன் செய்ய வேண்டிய திட்டம் Drone ( ட்ரோன்) மூலம் யானைகளை விரட்டுவது.
இதற்காக அவர்களுக்கு மூன்று ட்ரோன்கள் தேவைப்படுகின்றது.
அதேபோன்று 2015 ஆம் ஆண்டுகளில் வோக்கி டோக்கி தொலைத்தொடர்பு சாதனம் பாவனையில் இருந்தது தற்போது வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது இதை பயன்படுத்துவதற்கான அங்கீகாரமும் தொலைத்தொடர்பு சாதனமும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்
திட்டம் -B
104 கிலோ மீட்டர் முன்மொழியப்பட்ட யானை வேலி 20 கிலோமீட்டர் மாத்திரமே வாகரை மற்றும் கிரான் பிரதேசங்களில் 09 வேலிகள் போடப்பட்டுள்ளது இதன் ஏனைய 84 கிலோ மீட்டர் வேலைகளையும் தடையாக உள்ள வெளியிடுவதற்கான பண ஒதுக்கீடுகளை வரவழைப்பதன் மூலம் துரிதப்படுத்துவது மற்றும் உன்னிச்சை, புல்லுமலை மற்றும் வாகரைப் பிரதேசங்களில் மேலும் 3 காரியங்களை அமைப்பது.
திட்டம் -C
காடுகளை அண்டிய பிரதேசத்துக்குள் யானைகளை அதற்குரிய சாப்பாடு வசதிகளை அழிக்காதவாறும் கிராமங்களுக்குள் நுழையாதவாறும் யானை வேலிகளை பலப்படுத்தி பாதுகாப்பது.
இவைகளை ஆராய்ந்து எமது சில விவசாயிகளின் கருத்து யானை மனித மோதல்களையும் விவசாயிகளது மற்றும் பண்ணையாளர்களது அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாமல் யானைகளை காடுகளை சார்ந்த ஒரு பக்கமாக அதிகூடிய பாதுகாப்பு வேலிகளை அமைத்து வெளியில் வராதவாறு தேசிய பூங்காவாக இருக்கலாம், சரணாலயமாக இருக்கலாம், கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக ( SNR) இருக்கலாம் அல்லது கொறவபொத்தானையில் உள்ளது போன்று சிறைச்சாலை அமைப்பது ஊடாக யானை மனித மோதல்களை குறைப்பதுடன் இதன் மூலம் அண்டிய மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளவாறு உல்லாச பயணத் துறை மூலம் சம்பாதிப்பது போன்று சில காலங்கள் தரித்து நின்று மட்டக்களப்பிலும் உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிப்பதன் மூலம் விடுதிகள் மற்றும் புதிய வகையில் படுவான்கரை பிரதேசத்திற்குள் புதிய வருமானங்களை ஈட்டிக் கொள்வதற்கு இதை சரியான முறையில் ஆய்வுகள் செய்து ஏதோ ஒரு தலைப்பில் நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமாக
வழி வகுக்கலாம் என
முன்மொழியப்பட்டுள்ளது