காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை (01) அதிகாலையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்களை காத்தான்குடி பொலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவலைப்பில் மேற்படி இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் குறித்த இளைஞர்கள் தாங்கள் காட்ஸ் கூட்டம் விளையாடிய போதே தாங்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை காத்தான்குடி பகுதியில் விசேட பொலீஸ் குழுக்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்த மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.