கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப் பயணம் தலைமன்னாரை வந்து அடைந்தது.
சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணி, 15 நிமிடத்தில் குறித்த சாதனையினை தன்வந்த் படைத்துள்ளார்.
சாதனை படைத்த சிறுவனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.