ஏழு உயிர்களை காவு கொண்ட தியத்தலாவை Fox Hill கார் பந்தயம் பாதுகாப்பான முறையில் நடத்தப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரபட்டு வரும் செய்தியொன்று மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப் பந்தயங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட Fox Hill கார் ஓட்டப் பந்தயம் 5 வருடங்களின் பின்னர் இந்த வருடம் (2024) நடத்தப்பட்டுள்ளது.
தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற கார் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
தியதலாவ பகுதியில் பாரிய விபத்தொன்றில் ஏழு பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரோட்ட பந்தயம்
குறித்த பகுதியில் இடம்பெற்ற காரோட்ட பந்தய போட்டியின் (Fox Hill Super Cross – 2024 ) போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
போட்டியில் பங்குபற்றிய பந்தய கார் ஒன்று பந்தய பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதேவேளை விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.