எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடியில். மத்திய, மாநில உளவுத்துறை தீவிர விசாரணை…!
இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், கஜேந்திரன் மற்றும் அவரது எட்டு வயது மகன் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று இரவு சுமார் 11 மணியில் பூநகரி கடற்கரையில் இருந்து பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி சென்று இறங்கியுள்ளனர்.
தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் மூவரையும் மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.