மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலைக்கு முன்பாக நடைபெற்ற வீதி விபத்தில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக உள்ள நாற்சந்தியில் சற்று நேரத்துக்கு முன்பு தரித்து நின்ற முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாக்கியது.
முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் படு காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
.காத்தான்குடியை நோக்கி சென்ற கார் ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.