மட்டக்களப்பு – செங்கலடியில் போதைப்பொருள் தடுப்பு யுக்திய சுற்றிவளைப்பு.
நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு யுக்திய சுற்றிவளைப்பின் மற்றுமொரு கட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இன்று மேற்கொள்ளப்பட்டது.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ஹர்சடிசில்வா தலைமையிலான பொலிசார் மற்றும் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் இணைந்து இச் செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர்.
https://youtu.be/qoG4FiD7TQA?si=pvkJUaxDxR7emMae
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியினுடாக பயணித்த பஸ்கள் , மற்றும் சந்தேகத்திற்குரிய வாகணங்கள் பொலிசாரினால் நிறுத்தப்பட்டு செங்கலடி பகுதியில் சேதனைக்குட்படுத்தப்பட்டன.
பயணிகள் இறக்கப்பட்டு அவர்களின் பயணப்பொதிகள், உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்ட்டது. மேலும், பரிசோதிக்கப்பட்ட பஸ் வண்டிகள் பதிவு செய்யப்பட்டது.
இதன்போது சந்தேகத்தின் பெயரில் சிலர் ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.