இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மேற்படி வேண்டுகோளை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் சோதிராசா சிந்துஜன் விடுத்துள்ளார்.
அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது.
“இந்த இலங்கை தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்றுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
அதனடிப்படையில் எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக அறிவித்து இதனை வடக்கு கிழக்கு தழுவிய பிரகடனமாக வெளியிடுகின்றோம்.
இந்த இலங்கை தீவிலே தமிழ் மக்களுக்கான உரிமைகள், தமிழர்களின் இருப்புக்கள் மீறபட்டுக்கொண்டே வருகின்றது. ஆட்சிகள் மாறுகின்றது ஆட்சியாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள்
,ஆனால் தமிழ் மக்களுக்கு இன்றுவரை எந்த ஒரு தீர்வு திட்டமும் முன்னெடுக்கப் படவில்லை.
அது வெறும் பேச்சு மட்டத்தில் மாத்திரமே நல்லிணக்கத்தை பேசி வருக்கின்றார்கள்.
இதய சுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுதர சிங்கள தரப்புக்கள் தயாராக இல்லை .
இன் நிலையில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் சமூகங்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,
மதத்தலைவர்கள் அனைத்து தொழிற்சங்களும் இணைட சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்துவதற்கான ஆதரவினை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தினை சிதைக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது .நேற்றைய தினம்கூட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றபட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் நாட்டிலே ஊடக சுதந்திரத்தை , ஒரு பொதுமகனின் கருத்துச் சுதந்திரத்தை கூட இந்த அரசாங்கம் பறித்தெடுத்துள்ளது.
இதன்மூலம் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை ஒடுக்க இவ்வாறான சட்டங்களை நடைமுறைபடுத்தி மல்லினபடுத்தி அவர்களை கைது செய்கின்ற தொலைதூர நோக்கோடு இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.
இவர்கள் ஒருபொழுதும் தமிழர்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை , காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்,வடக்கு கிழக்கில் அத்துமீறி நிகழுகின்ற குடியேற்ற திட்டங்கள், திட்டமிட்ட பௌத்த மயமாக்கள் என்பவற்றை நிறுத்த போவதில்லை .
எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பதே வரலாற்று உண்மை.
மேலும் கரிநாள் என்பது சிங்கள மக்களுக்கும் பொருத்தமானதே காரணம் இன்றைய தினம் சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணமே உள்ளது.
இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
சமநேரத்தில் எங்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனடிப்படையில் 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கான ஆரம்ப புள்ளியோ முடிவு புள்ளியோ கிடையாது .13இனை நாம் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது.ஆகவே தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணாது நாங்கள் எங்களுடைய போராட்டங்களையோ போராட்ட வடிவங்களையோ கைவிடப்போவதில்லை என பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம்.
எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும். இனத்திற்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனபடுத்த பூரண ஆதரவினை தந்துவுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்தார்.