கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு கலப்பு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (14.02.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உதயரூபன் ஐஸ்மன் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 45 வயதுடைய புஷ்பராஜா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை – கிண்ணியா, மகாவலி ஆற்று பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர
மீன்பிடிப்பதற்காக இவர்கள் பயன்படுத்திய படகு மகாவலி ஆற்று பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.