தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிராகவே உள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது
ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பிலானது கலந்துரையாடல்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
இதுவரை பொது வேட்பாளர் யார் என்பது பிரேரிக்கப்படவில்லை. ஆனாலும் மதங்களைக் கடந்து வடக்கு கிழக்கை பிரதநிதிப்படுத்தும் ஒருவரே பிரேரிக்கப்படுவார்.
மலையகம் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிக்கிறோம் அவர்களுடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சம்மதித்தால் அவர்களுடனும் பேச நாம் தயார்.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை முக்கிய தலைவர்கள் எமது நிலைப்பாட்டில் ஆதரவாக உள்ளனர். சுமந்திரன் இதற்கு எதிராகவே உள்ளார் என தெரிவித்தார்.