மட்டக்களப்பில் யானைகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காட்டு யானைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கிராம மக்களை விழிப்பூட்டும் நிகழ் இன்று(15) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் செங்கலடி வேப்பவெட்டுவான் பகுதியில் உள்ள மக்களை விழிப்பூட்டும் நிகழ்வு
இன்று நடைபெற்றது.
இங்கு காட்டு யானைகள் மற்றும் மனிதர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தடுப்து தொடர்பாகவும் ,கிராம மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுதல் , கிராம மக்களை யானைகளிடம் இருந்து பாதுகாத்தல், யானைகளை கிராம மக்களிடம் இருந்து பாதுகாத்தல், விவசாயிகளுக்கு யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள், யானைகளிடம் இருந்து எவ்வாறு கிராமங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்வைத்திருந்தனர்.
கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு காடுகளை துப்புரவு செய்யும் பணிகளும் ஏறாவூர் பற்று பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் செங்கலடி – வேப்பவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில்இந் நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் , ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர், வேப்பவெட்டுவான் கிராம சேவகர் , வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்புகள் அரச திணைத்தளங்களின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.