தமிழகத்தின் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சாந்தன் ஈழத்தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
போராளி சின்ன சாந்தன் இயற்கை எய்தினார்.
05-09-2005 அன்று வேலூர் சிறையிலிருந்து எனது முகவரிக்கு அஞ்சல் அட்டையோடு தொடர்பு கொண்டார், சாந்தன். அவரது இறுதி ஆசை, தனது ஈழத்தில் உள்ள அம்மா – வும் இணைந்து கொள்ள வேண்டும் என நினைத்திருந்தார். இவரது, இந்த ஆசையையாவது நிறைவேற்ற வேண்டும் என பல வழிகளில் முயற்சி செய்தோம். அவரது குடும்பத்தினர், இலங்கை மீன் வள துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – விடம் நேரில் சென்று கடிதமொன்றை கையளித்திருந்தனர். டக்ளசோடு நானும் இது தொடர்பாக பேசி, உதவுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் உதவுவதற்க்கான நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். அமைச்சரும், ரணிலிடமும், இலங்கை வெளியூறவு துறை அமைச்சரிடமும் பேசி, சாந்தனை திரும்ப கொண்டு வர இறுதி முயற்சிகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால், தனது இறுதி ஆசையை நிறைவு செய்யாத நிலையில், இப்போது இயற்கை பிரித்து கொண்டது.
சின்ன சாந்தனின் இயக்கத்திற்கான செயற்பாடுகள் அளப்பரியது என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அவருக்கு உரிய பட்டம் வழங்க வேண்டும் என்பது தான், அவருக்கு நாம் செய்யும் மரியாதை.
– அக்னி சுப்ரமணியம்,
உலகத் தமிழர் பேரவை