புதிய இணைப்பு
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை அணிக்கு வெற்றியிலக்காக 174 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறும் இன்றைய முதலாவது போட்டியில், சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
மேலும் பெங்களூர் அணி சார்பில் அனுஜ் ராவத் அதிகபட்சமாக 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
முதலாம் இணைப்பு
கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்கின்றன.
குறித்த போட்டியானது இன்றையதினம் (22.03.2024) சென்னை சிதம்பரத்தில் அமைந்துள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்
இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் முதல்முறையாக இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், நடிகர் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இருவரின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றிருந்ததுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது.