மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பெருந்தொகையான குரங்குகள் நகருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது.
அண்மைக்காலமாக செங்கலடி நகர் பகுதிகளுக்குள் தொடர்ச்சியாக வரும் பெரும் தொகையான குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து குளிர்சாதனப் பெட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வதோடு, வீடுகளில் உள்ள பால் மா, மற்றும் உணவுப் பொருட்களை திருடிச் செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செங்கலடி பிரதேசத்தில் உள்ள தென்னை மரங்கள், மாமரங்கள்,ஜம்பு மரங்கள் என அனைத்து மரங்களிலும் உள்ள பூ, பிஞ்சு, காய்களை பறித்து நாசம் செய்வதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.