ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஒருங்கிணைத்து
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
காத்தான்குடியில் உள்ள சில முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகங்கள், மற்றும் புத்திஜீவிகள் என பலரும் மேற்படி நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் குறித்த நிகழ்வு மிகப் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்றைய இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் இஸ்புல்லா,நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முஹம்மட் முஹம்மட் ஹரீஸ், மௌலானா,முஷாரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சமமேளனம்,ஜம்மியத் துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் ஆகியோருக்கு குரான் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
இப்தார் மாதத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்திற்கு 5 இலட்சம் ரூபாய் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இப்தார் நிகழ்வுக்கு எதிராக காத்தான்குடி முஸ்லீம் சமூகத்தினால் கீழ் உள்ளவாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
21/03/2024
இfப்தார் நிகழ்விற்கு நிதிப்பங்களிப்பு செய்யும் தீர்மானம் எதுவும் இல்லை!மெத்தைப்பள்ளிவாயல் தலைவர் தெரிவிப்பு!!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எதிர்வரும் 22/03/2024ஆம் திகதி வியாழக்கிழமை, கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் காத்தான்குடியில் நடைபெறவுள்ள பிரமாண்டமான இfப்தார் நிகழ்வு சம்பந்தமான எதிரலைகள் கடந்த சில நாட்களாக சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில்,
பிரதான “ஜும்ஆ” பள்ளிவாயல்கள் “நிதி”ப்பங்களிப்பு செய்வது செய்வது சம்பந்தமாக சர்ச்சையை தெளிவுபடுத்தும் வண்ணம் காத்தான்குடி, மெத்தைப் பெரிய பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் அல்ஹாஜ் AMM.றவூப்.JP அவர்களைத் தொடர்பு கொண்டு,
நாளை 2024.03.22ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் காத்தான்குடியில் நடைபெறவுள்ள பிரமாண்டமான இfப்தார் நிகழ்விற்கு, மெத்தைப்பள்ளிவாயல் பொது நிதியில் இருந்து நிதிப்பங்களிப்பு செய்யப்படுகிறதா? என வினவப்பட்ட போது,
நாளை 22ஆம் திகதி ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இfப்தார் நிகழ்விற்கு நிதிப்பங்களிப்பு செய்வது சம்பந்தமாக,
நிருவாக சபையினால் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவும் இல்லை என்பதுடன் எந்தவித நிதிப்பங்களிப்பு செய்யும் உத்தேசமும்இல்லைஎன,
மெத்தைப்பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் அல்ஹாஜ் AMM.றவூப்.JP உறுதிபடத் தெரிவித்தார்.
-MSM. ஜஃபர்-