கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறை குறித்த போராட்டம் இன்றும் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
குறித்த போராட்டம் தொடர்பாக எந்த ஒரு அரசியல்வாதிகளோ அரச தரப்பினரோ அரச சார் நிறுவனங்களோ இதுவரை கண்டுகொள்ளாத நிலையில் இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்றைய போராட்டத்தில் விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த நிர்வாக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் நிரந்தர முடிவு கிட்டும் வரை தொடர்ச்சியாக இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.