கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமைக்கு காரணம் ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகளின் பக்கச்சார்பான அதிகார பயங்கரவாதமே காரணம் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட்டால் தங்களுடைய இருப்பு கேள்விக்கு உள்ளாகும், தமிழ் பிரதேசங்களில் உள்ள காணி உள்ளிட்ட சில அபகரிப்புக்களை செய்ய முடியாது போய்விடும் என்கின்ற சில முஸ்லீம் அரசியல் வாதிகளின் இனவாத போக்குடைய செயற்பாடே இதற்கு காரணமாக உள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரோடு கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை நடாத்தி வந்திருக்கிறோம். பல வாக்குறுதிகள் தரப்பட்டு அவை தொடர்ச்சியாக மாறி மாறி வரும் ஜனாதிபதி பிரதமர்களினால் மீறப்பட்டுள்ளது.
நாங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றோம்.
இன்று மட்டக்களப்பில் கோரளைப் பற்று மேற்கு மத்தி சுயாதீனமாக இயங்குகிறது. எட்டு சதுரக் கிலோமீட்டர் பரப்புள்ள பிரதேச செயலகம் சுயாதீனமாக இயங்க முடியுமானால் அதற்கு முன்பு உருவாக்கப்பட்ட முப்பத்தி ஐயாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட, 300 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களை கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏன் இயங்க முடியாது? இது ஒரு இனவாதமான செயற்பாடு.
இன்று மட்டக்களப்பில் புவியியல் தொடர்வு இல்லாத மட்டக்களப்பு மத்திய வலயம் என முஸ்லீம் மாணவர்களை மையப்படுத்தி இயங்க முடியுமானால்
புவியியல் தொடர்போடு இருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இயங்க முடியாது.
இது குறித்து நடைபெற இருக்கும் பாராளுமன்ற அமர்வில் பேச இருக்கின்றேன் என தெரிவித்தார்.