கிழக்கில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான
சி.ஆ.ஜோதிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்
தமழரசுக் கட்சியின் உள்ளக முறண்பாடு, நீதிமன்றம் வரை இழுத்துவிடப்பட்டுள்ள சூழ்ச்சியும், எதிர் வரும் தேர்தல்களில் கையறு நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.
மாறி மாறி புதிய விடயங்களை இடை மனைக்களாக புகுத்துகின்றனர். இதன் மூலம் எதிர் வரும் தேர்தலில் காத்திரமான முடிவை தமிழரசுக்கட்சி எடுக்க முடியாது நிலையில் உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தமிழரசுக் கட்சி ஆதரிக்கும் நிலையில் உள்ளது. அதுவும் பின்னணியில் பிற சக்திகளின் சூழ்ச்சியாக இருக்கலாம்.
சர்வதேச சக்திகளின் கைங்கரியமும் தமிழரசை இல்லாது பன்னும் முயற்சியாக இருக்க வாய்ப்புள்ளது.
ஜனாதிபதி பொது வேட்ப்பாளரை நிறுத்துவதாக இருந்தால் கிழக்கில் இருந்து ஒருவரை தெரிவு செய்வதே சிறந்தது.
வேலன் சுவாமிகள் பொருத்தமானவர் என்று கூறப்பட்ட போதும் அவர் அதனை மறுத்துவிட்டதாக அறிகிறோம்.
எனது கருத்து கிழக்கில் இருந்து ஒருவரை தெரிவு செய்தால் நன்றாக இருக்கும். முன்னாள் காணி ஆணையாளர், அல்போன்ஸ் மேரி போன்றவர்கள் பொது வேட்பாளருக்கு பொருத்தமானவர்கள் என தெரிவித்தார்.