(கஜனா)
கல்முனை வடக்கு பிரதேச செயலக அமைச்சரவை தீர்மானம் குறைத்த விடயத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்த நிலையில் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்த சம்பந்தப்பட்ட பிரச்சினை கையாளும் அதிகாரம் கொண்ட இராஜாங்க அமைச்சர் கபடத்தனமாக ஏமாற்றியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்திருந்தார்.
ஆறாவது நாளான போராட்ட களத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் அரியனேந்திரன் யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் இதன் போதே அவர் கருத்தினை வெளியிட்டு இருந்தார்.
இதேவேளை எதிர்க்கட்சியில் தாங்கள் இருந்ததன் காரணமாக அரசாங்கத்துடன் ஒத்துப் போகும் நிலை ஏற்பட்டதாகவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான விடையத்தில் அரசாங்கம் அதனால் இழுத்தபடி இருந்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் தெரிவித்திருந்தார் .
மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிடுங்கப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டு சுயாதீனமாக தன் எல்லையில் இயங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான செயல்பாட்டை மேற்கொண்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
24 மனதியாளத்தில் முடிவு பெற்று தருவதாக கடந்த காலங்களில் தெரிவித்த வியாழன் எங்கே? மற்றும் கருணா, பிள்ளையான எங்கே எனவும் பல கேள்விகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் எழுப்பியிருந்தார்.