கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்காக செயலாற்றுவதற்காக மட்டுமே, இருந்த போதிலும் அவர் தனது அதிகாரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் பிரயோகித்து வருவது சட்டவிரோதமானதும், சட்டமுறை அற்றதும் காரணம் அற்றதும், அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதும் , இந்த சட்டவிரோத நடவடிக்கையை மாவட்ட செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அனுமதித்து வருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிதி நடவடிக்கைகள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் கையாளப்படுகின்றது. இது காரணம் அற்றதும் சட்ட முறையற்றதும் சட்டவிரோதமானதும், அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதுமான ஒரு விடயமாகும். கணக்காளர் பதவிக்கான ஆளணி அனுமதிக்கப்பட்டிருந்தும் அப்பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட செயலகத்தினாலும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினாலும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை . என்று சட்டமுறை ஏற்ற செயற்பாடுகளை முன்வைத்து இன்றும் ஒன்பதாவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்றைய பாராளுமன்ற அமைப்பின் போது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன், ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறித்த மக்களின் போராட்டம் தொடர்பாகவும் குறித்த பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சனைகளையும் எடுத்துரைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.